*திருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தானம்
திருப்பதியில் பாதுகாப்பு கருதி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு இருக்க வேண்டும்👍 என்று முடிவு செய்யப்பட்டு திருமலை முழுவதும் 1400 அதிநவீன சிசிடிவி 📹கேமராக்கள் பொருத்தப்பட போவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது🔈. இது குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ 📰செய்தியாளர்களிடம் பேசுகையில்🎙, "முதற்கட்டமாக 250 சிசிடிவி கேமராக்கள் கோவிலுக்குள் மட்டும் 30 நாட்களுக்குள் பொருத்தப்பவுள்ளது. பாதுகாப்பு பணிகள் குறித்து திருமலையில் என்.எஸ்.ஐ.சி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து படிப்படியாக திருமலை முழுவதும் மீதமுள்ள இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்😯. மேலும், திருமலையை பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்ற😳 தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுடன் இணைந்து 📹சிசிடிவி கேமரா, 📺டிவி டிஸ்ப்ளே உள்ளிட்டவை வாங்கப்பட்டு பொருத்தப்படவுள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS